இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 28 ஜூலை, 2015

நரம்பிழந்த வீணை - கவிதாஞ்சலி


                                                    கலாமுக்குக் கவிதாஞ்சலி   


சாதாரண குடியில் பிறந்து
சாமானியனாகிவிட்ட
சரித்திர நாயகனே!  உன்
சாதனைகள் அளவிடற்கரியது. உமது
 போதனைகள் யாவும்
புடம் போட்ட தங்கமாய் -  இப்
பூவுலக மக்களைப்
பொலிவுறச் செய்யும்.

எல்லாரும் கனவு காணுங்கள் என்று
இளைய தலைமுறைக்கு எடுத்தியம்பி
அவர்களை எழுச்சியுறச் செய்த
இமாலய சிகரமே!

உமது அறிவியல் சாதனைகளால்
உலக நாடுகளில்
ஒப்பற்ற நாடாக
இந்தியத் திருநாட்டை
மாற்றி அமைத்த
மாமேதையே!
 உமது பிரிவு
இவ்வுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

நீ மண்ணை விட்டு மறைந்தாலும்
எங்கள் மனத்தில்
எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.

 வாழ்க நின் புகழுடல்! மேலும் வளர்க நின் புகழ்!

                                         -- கவிஞர். வ. கோவிந்தசாமி,
                                              இளநிலை உதவியாளர்,
                                                              அரசு மேனிலைப் பள்ளி, 
                                                              இலந்தக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக