இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 14 ஜூலை, 2015

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள்

சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் 

                    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நேற்று 13/7/2015 திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

                   விளையாட்டுப் போட்டியைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அ. வடிவேல் அவர்கள் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்குப் படிப்புடன் விளையாடும் அவசியம். அத்துடன் நம் தமிழகப் பாரம்பரிய விளையாட்டான சதுரங்கப் போட்டி மூளையின் செயல்பாட்டுக்கு வழிவகுப்பதுடன் சிந்தனையைத் தூண்டுகிறது என்றார்.

                  இந்த விளையாட்டுப் போட்டியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறுவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர். விளையாட்டுப் போட்டிகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக