இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாமுக்குக் கவிதாஞ்சலி


                                      உதிர்ந்த அக்னிச் சிறகு 

கடலன்னையின்மடிபிறந்து
மலைஅன்னையின் மடி சேர்ந்த
மாமேதையே!

 இந்தியாவின்  சூரியன் நீ !
இளைஞர்களின் உற்சாகம் நீ!
மாணவர்களின் இலக்கு நீ !
விஞ்ஞானிகளின் பெருமை நீ!
இந்தியாவின் விடிவெள்ளி நீ!

அக்னியைப் படைத்து
மாணவர் சிறகுகளை விரிக்கச் செய்த நீ!

எங்கே சென்றாய் நீ ?
ஏவிய ஏவுகணையைக் காணவா?
இந்தியாவின் புகழின் உயரம் காணவா ?
இளைஞர் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தவா?
அல்லது உலகோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவா?

... ..... ...... ..... ...... ...... ..... ..... ..... .....

வார்த்தைகள் இல்லை!!!
உன்னை இழந்து தவிக்கின்றோம்...
வால்  அறுந்த பட்டமாய்!
வாடிக் கிடக்கின்றோம் நீர் இல்லாச் செடிகளாய்!

எங்களைக் காண  வா!!!!


                                                         --  இரா. சுப்பிரமணியன்,
                                                              பட்டதாரி ஆசிரியர் ( கணிதம்)
                                                              அரசு மேனிலைப்பள்ளி,
                                                              இலந்தக்கோட்டை

3 கருத்துகள்:

  1. வணக்கம்,
    நாமும் நம் அஞ்சலியைச் செலுத்துவோம்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. காலம் கடந்த கலாமுக்கு கவிதை வடிவில் கண்ணீர் அஞ்சலி

    பதிலளிநீக்கு


  3. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

    பதிலளிநீக்கு