இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய நிகழ்வு


             லந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் இன்று  10/02/2015 மதியம் மாணவர்களுக்கு உணவு இடைவேளைக்குப் பின்,  தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டன.  மாணவர்களுக்கு ரத்த சோகை நீங்கிச் சுறுசுறுப்பை ஏற்படுத்த இம்மாத்திரைகளை இன்று பள்ளியில் பயிலும் ஒன்று முதல் பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.அதன் அடிப்படையில் நம் பள்ளியில் மதியம் இரண்டு மணி அளவில் தி.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர்கள் திருமதி. முனியம்மாள், ஜோதிலட்சுமி ஆகியோர்  மூலமாக, பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. அ.வடிவேல் அவர்கள் முன்னிலையில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.இரா. சுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக