இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு






          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி  அவர்கள் பணியிட மாறுதலில் தாழையூத்து அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றார். 31.10.2014 வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு செய்யப்பட்டார். அவர் மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்றுக் கல்வித்துறையில் வலம்வர  வாழ்த்துகிறோம்.

                 அதே நாளில்   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய  திரு அ . வடிவேல் என்பார் பதவி உயர்வு பெற்று  நம் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பணி ஏற்றுள்ளார். அவர் தலைமையில் பள்ளியில் கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைந்து சிறப்படைய மனமார வாழ்த்துகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக