இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 16 அக்டோபர், 2014

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக் கணினிகள் வழங்கும் விழா - 15/10/2014



திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் நேற்று 15/10/2014 செவ்வாய்க்கிழமை மேனிலை மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மற்றும் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புப் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.  இந்த விழாவில் மாண்புமிகு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. எஸ். பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு அறுபது மாணவர்களுக்கு மிதிவண்டிகளையும் நாற்பத்தாறு மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்த விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியருடன் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், கட்டடக் குழுத் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக